என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "நெல் அறுவடை எந்திரம்"
- நெல் அறுவடை நடக்கும் பகுதியிலேயே தங்கி பணி செய்து விட்டு, 15 தினங்களுக்கு ஒருமுறை வீட்டிற்கு வந்து செல்வார்.
- 10 தினங்களாக தொடர்பு கொள்ள முடியவில்லை.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டம் திருநாவலூரை அடுத்த பெரியப்பட்டுபகுதியைச் சேர்ந்த அன்பரசன் (வயது 36). இவர் நெல் அறுவடை எந்திர டிரைவர். இவருக்கு பாணுப்பிரியா (29) என்ற மனைவியும், 3 பெண் குழந்தைகளும் உள்ளனர். நெல் அறுவடை நடக்கும் பகுதியிலேயே தங்கி பணி செய்து விட்டு, 15 தினங்களுக்கு ஒருமுறை வீட்டிற்கு வந்து செல்வார்.
இந்நிலையில் கடந்த 4-ந் தேதி கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே அவியனூர் பகுதிக்கு வேலைக்கு செல்வதாக கூறிவிட்டு வீட்டை விட்டு சென்றார். பின்னர் 10 தினங்களாக தொடர்பு கொள்ள முடியவில்லை. இவரது மனைவி பாணுப்பிரியா நெல் அறுவடை இயந்திர உரிமையாளரை தொடர்பு கொண்டு கேட்ட போது அவர் வேலைக்கு வரவில்லை என்று கூறினார். இதனால் அதிர்ச்சியடைந்த பாணுப்பிரியா திருநாவலூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். திருநாவலூர் இன்ஸ்பெக்டர் அசோகன், சப்-இன்ஸ்பெக்டர் பிரபாகரன் மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்